search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான் போட்டி"

    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்
    • ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி அண்ணா நுழைவு வாயில் வழியாக கிரிவலப்பா தையில் உள்ள அபய மண்டபத்தில் நிறைவு பெற்றது.

    5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பரிசாக, ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க ப்பட்டது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என 3 பிரிவாக இந்த பரிசுகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்ப ட்டது.

    அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 மற்றும் 7 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.

    மேலும், சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா, நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் முகமது பாரூக், தேனி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ஜெ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் சரஸ்வதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    • தேவகோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் சென்று முடிவடைந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் வீட்டுக்கு வீடு சோலார் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் வரவேற்றார். மாரத்தான் தியாகிகள் பூங்கா தொடங்கி திருப்பத்தூர் சாலையில் வழியாக ராம் நகர் கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் முடிவடைந்தது. இப்போ போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளை மருத்துவர் சிவகுமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.

    இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது.
    • இந்த மாரத்தான் போட்டி 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டி 42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73, 206 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் 42 கிமீ பிரிவு இன்று அதிகாலை 4 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73 ஆயிரத்து 206 பேர் முன் பதிவு செய்துள்ளார்கள்.
    • அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டுக்கான கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 737 பேர் ஓடினார்கள். இது ஆசிய சாதனையாக பதிவானது. இதில் கிடைத்த ரூ.1 கோடியே 22 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் சுமார் 5 கோடி செலவில் எழும்பூர் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்படுகிறது.

    இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியாக நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிறு) நடைபெறும் மாரத்தான் 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

    42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73 ஆயிரத்து 206 பேர் முன் பதிவு செய்துள்ளார்கள். இது கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    42 கி.மீ. மற்றும் 21 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். 10 கி.மீ. பிரிவில் தலா ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ. 15 ஆயிரமும், 5 கி.மீ. பிரிவில் ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

    கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.

    வழிநெடுக 14 இசைக்குழுக்கள் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும். 17 இடங்களில் குடிநீர், ஊக்கப் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால் இந்த போட்டியை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னெடுத்து செய்வதில் பெருமை கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரத்தான் போட்டி பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.
    • அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழுப்புரம், மே.2-

    விவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மஞ்சப்ைப அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவி லான மினி மாரத்தான் போட்டி விழுப்புரத்தில் நடை பெற்றது. இப்போட்டி யை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாண வர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழி யாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடி வடைந்தது. இப்போட்டி யில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், திருநங்கை கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனை அமைச் சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பழனி, டாக்டர் பொன்.கவுதமசிகா மணி எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சு மணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    • திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    • போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இப்போட்டிகள் பள்ளி பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ- மாணவிகள் ஆண்கள் பெண்கள் என 4 பிரிவாக 5 கிலோ மீட்டர் தூரமும் திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் பொதுப்பிரிவினர்கள் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுமதும பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
    • போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகளிா் தின கொண்டாட்டம் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நடந்தது. இதில் பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவம் என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியை மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ×